News

டகால்டி பின்னர் டிக்கிலோனா என்று பெயர் வைத்த சந்தானம்

Published

on

ஒரு கால கட்டத்தில் காமெடி அரசனாக வலம் வந்தவர் சந்தானம் கடந்த மூன்று ஆண்டுகளாக காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு கதாநாயகனான நடித்து வருகிறார்.

ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு- 2’ மற்றும் ‘ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது தற்போது அவர் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘டகால்டி’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மற்றும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை வாங்கி மிகப்பெரிய லாபம் சம்பாதித்த நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் சந்தானம் முதன்முறையாக ஹீரோ, காமெடியன் மற்றும் வில்லன் ஆகிய மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த படத்தின் தலைப்பு டிக்கிலோனா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கவுண்டமணியின் காமெடி பஞ்சான டகால்டியை தலைப்பாக வைத்திருந்த சந்தானம் இப்போது மற்றொரு பிரபலமான பஞ்சான டிக்கிலோனாவை தனது படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version