News

கே.ஜி.எப் இயக்குனருடன் இணையும் தளபதி விஜய்?

Published

on

இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கி சினிமா உலகில் பிரபலமானவர் இவர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் என்ற்ற படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது சலார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளதாக இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று நான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் கோலிவுட் வட்டாரத்தினர் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று மறுக்கின்றனர்.

Trending

Exit mobile version