News

திரிஷா, கீர்த்தியுடன் இணைகிறார் !

Published

on

சீனியர் நடிகை அந்தஸ்தில் இருந்தாலும் முன்னணி பட்டி யலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் திரிஷா. ஒரு கட்டத்தில் நயன்தாராவு டன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
பின்னர் இருவரும் நெருக்கமான தோழிகளாயி னர். இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை நயன் தாராவின் பாய்பிரண்ட் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந் தது. ஒரு கட்டத்தில் நயன் தாராவுக்கு அதிக சம்பளமும் திரிஷாவுக்கு குறைவாகவும் பேசப்பட் டது.
இதில் வெறுத் துப் போன திரிஷா அப் படத்தில் நடிக்க மறுத்தார். இதையடுத்து அந்த படம் டிராப் ஆனது.
நயன்தாரா படத்தால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் டபுள் ஹீரோயின் கதைகளை தவிர்த்தார் திரிஷா. இந்நிலையில் கடந்த 14 வருடத்துக்கு முன் அவர் நடித்த ‘சாமி’ படத்தின் 2ம் பாகம் இயக்க முடிவு செய்திருந்தார் ஹரி.
மீண்டும் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். திரிஷா ஹீரோயினாக இணைந்த போதும் மற்றொரு இளம் நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவுசெய்தார் ஹரி. இது பற்றி திரிஷாவிடம் தெரிவித்தார். மறுப்பெதுவும் சொல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இளம் நாயகி யாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பிரபு, சூரி, பாபி சிம்ஹா நடிக்கின்றனர்.
புலி, இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். பிரியன் ஒளிப்பதிவு. தேவிபிரசாத் இசை. இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை, திருநெல்வேலி, கேரளா, புது டெல்லி, முசூரி மற்றும் நேபாளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.

Trending

Exit mobile version