Connect with us
 

News

துள்ளுவதோ இளமை இரண்டாம் பாகம் எப்போது வரும் செரின் செல்வராகவனிடம் கேள்வி !

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர் நடிகை செரீன் இவர் நடித்த படங்கள் சரியாக போகாதால் அந்த வாய்ப்பு பறி போனது. அப்படி பறி போனாலும் இவர் ஆரம்ப கட்டத்தில் அதாவது இவரின் தமிழ் சினிமாவில் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படம் இவருக்கு கொடுத்த அந்த பெயர் புகழ் இன்று வரையில் இவருக்கு இருந்து வருகிறது அதனால்தான் தமிழ் ரசிகர்கள் இவரை இன்றுவரையும் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு மிக்கிய காரணமும்.

அந்த படத்தில் இவர் மட்டும் அல்ல நடிகர் தனுஷ்,மற்றும் இயக்குநர் செல்வராகவனுக்கு அதுவே முதல் படமாகும். சில தினங்களுக்கு முன்னர் தனுஷ் ரசிகர்கள் தனுஷின் திரையுலகில் 18-ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் துள்ளுவதோ இளமை படத்தின் படப்பிடிப்பு நினைவுகளில் மூழ்கிய செரீன் மீண்டும் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் பணிபுரிய நான் காத்திருக்கிறேன். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.

இது குறுத்து செல்வராகவன் தரப்பு மிக அமைதியாக இருந்து வருகிறது. இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன்.மற்றும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பற்றித்தான் ரசிகர்கள் பேசுகிறார்கள் தவிர துள்ளுவதோ இளமை படம் பற்றி யாரும் பேசவில்லை என்பதுதான் உண்மை.