Connect with us
 

News

தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் சிம்பு – நயன்தாரா !

Published

on

சிலம்பரசன் – நயன்தாரா இருவரும் இணைந்து வல்லவன், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக தேசிய விருது பெற்ற இயக்குநர் ராமின் இயக்கத்தில் இருவரும் நடிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் தற்போது அவரது காதலன் இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் நெற்றிக்கண் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தேசிய விருது வென்ற இயக்குநர் ராமின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இப்படத்தில் நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கயுள்ளார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் அதிகார்வபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.