News

நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல்

Published

on

துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது.

ஸ்ரீதேவியின் உடல் தொடர்பான தடவியல் அறிக்கை அவரின் குடும்பத்தினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதில், அவர் நீரில் மூழ்கி அவர் மரணமடைந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை, குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி அவர் மரணமடைந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

மயக்கம் ஏற்பட்டு அவர் நீரில் மூழ்கியிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், அவரின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version