News

படத்தோட மொத்த பட்ஜெட் 500 கோடி அதனால என் சம்பளத்தை அதிகமாக கேட்டேன் – மிஷ்கின்

Published

on

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன் -2 படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டது. இந்த படம் குறித்து விஷால் – மிஷ்கின் இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.

தற்போது கிடைத்த தகவலின் படி துப்பறிவாளன்2 படத்தை முடித்து கொடுக்க மிஷ்கின் விஷாலிடம் ரூ.40 கோடி ரூபாய் கேட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்ப்பட்டு மிஷ்கின் விலகி விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார் நான் விஷாலிடம் 40 கோடி கேட்கவில்லை 400 கோடி கேட்டேன்.

இந்த படத்தின் மொத்த பட்ஜேட் 500 கோடி , படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ.100 கோடி செலவாகும் என கிண்டலாக கூறினார். இவர் கூறிய இந்த பதில் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தற்போது கிடைத்த தகவலின் படி துப்பறிவாளன்2 படத்தை விஷாலே இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் தற்போது சக்கரா படத்தின் இறுதிக்கட்டத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடித்து முடித்த பின்னர் துப்பவறிவாளன்2 படத்தை இயக்கவுள்ளார்.

Trending

Exit mobile version