News

புது வருடத்தில் மாஸ்ஸான அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் !

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ், தெலுங்கு, ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்தது அப்போது இந்த படம் வெற்றி பெற்றாலும் பாகுபலி படம் வெளியான பின்னர்தான் இது போன்ற படம் அப்போது வந்துவிட்டது என்று மிக பிரமாண்டமாக பேச ஆரம்பித்தனர்.

இப்படி இருக்க இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேள்விகள் கேட்ட வண்ணமே இருந்தனர் இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.

இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பாகம் குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

முதல் பாகத்தில் கார்த்தி, பார்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று அறிவித்தார். மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் 2024-ஆம் ஆண்டு வெளிவரும் என்றும் அறிவித்து இருந்தார் அந்த அறிக்கையில்.

கிட்டத்தைட்ட இந்த படத்துக்கு ஆரம்பகட்ட பணிகள் செய்யவே ஒரு வருடம் தேவைப்படம். இந்த படம் தமிழில் ஒரு வித்தியாசமான திரைபப்டமாக இருக்கும் என்றும் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுந்தார்.

Trending

Exit mobile version