News

பூலோகம் படத்தின் இயக்குநருடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி !

Published

on

வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம்தான் ‘பூலோகம்’ இந்த திரைப்படத்தை எஸ்.பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரம் தயாரித்து இருந்தார்.

குறித்த நேரத்தில் படத்தை எடுத்து முடித்தாலும் படத்தின் இயக்குநருக்கு தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் நீண்ட காலமாக முடங்கி கிடந்து பின்னர் ஒரு வழியாக வெளியானது.

அப்படி தாமதமாக வெளியானலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இஅய்க்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளார் ஜெயம் ரவி.

Trending

Exit mobile version