News

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2022-ஆம் ஆண்டு வெளியீடு !

Published

on

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைபப்டத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விக்ரம், கார்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பல சினிமா முன்னனி நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது அதிகாலைக்கு தொடங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு வரை தொடர்ந்து நடக்கிறதாம். இதனால் வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்தாலும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளதாம்.

அதை முடிக்க சுமார் 6 மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் 2022ல் ஏப்ரல் மாதத்தில் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர் படக்குழு, இதன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் வெளியிடவும் மணிரத்னம் யோசித்து வருகிறாராம்.

Trending

Exit mobile version