News

மீண்டும் இணைகிறதா ரஜினி-முருகதாஸ் கூட்டனி ?

Published

on

சர்க்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த க்ரைம் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறது.

ரஜினியின் சினிமா பயணத்தில் இந்த படம் 166 படமாகும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். யோகி பாபு காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்கள். சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதை விட சந்தோஷமான தகவல் என்னவென்றால் தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஒரு வேலை இது உண்மையாக இருந்தால் கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

Trending

Exit mobile version