News

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் தனுஷ் !

Published

on

2017 ஆம் ஆண்டு வெளிவந்த பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். தனுஷ் இயக்கி , தயாரித்த இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்து இருந்தார்.

ரேவதி , பிரசான்னா , சாயா சிங் ,மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தனுஷ் இதில் இளம் வயது ராஜ்கிரணாக நடித்து இருந்தார். இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தனுஷ் ஒரு வரலாற்று படத்தை இயக்கினார் . ஆனால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது பா. பாண்டி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் இதில் ஹீரோவாக ராஜ்கிரண் மற்றும் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும் தனுஷின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன் ” என்னும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

By : Saranya

Trending

Exit mobile version