Connect with us
 

News

மீண்டும் கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி !

Published

on

இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பூலோகம் படத்தில் ஜெயம் ரவி பாக்ஸ்டர் வேடத்தில் நடித்து இருந்தார். குத்துச்சண்டை போட்டியின் பின்னணியில் உள்ள அரசியலை சொல்லும் படமாக இது வெளியானது.

இந்நிலையில் கல்யாண கிருஷ்ணனுடன் மீண்டும் ஜெயம் ரவி கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதை வட சென்னையில் உள்ள கேங்ஸ்டர்களை பற்றியது என்கிறார்கள். ஜெயம் ரவி ஏற்கனவே அமீர் இயக்கத்தில் வெளியான ஆதிபகவான் படத்தில் கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவி தற்போது மணிதத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

இப்படத்தின் அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Continue Reading