News

முகத்தில் ரத்தம் வடிய தொழுகை செய்யும் சிலம்பரசன் !

Published

on

சிலம்பரசன் கொரோனா ஊரடங்கு வருவதற்க்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில்தான் நடித்து வந்தார் அதன் பின்னர் ஊரடங்கு போட்டதால் சுசீந்திரன் இயத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து படப்பிடிப்பையும் முடித்து விட்டார். அதன் பின்னர் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சனிக்கிழமை காலை 10.44 வெளியாகும் என்று படக்குழு அறிக்கை விடுத்தது. அதன்படி இன்று காலை ‘மாநாடு’ படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் சிலம்பரசன் அப்துல் காலிக் எனும் முஸ்ஸீம் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருமே அறிந்ததே. இன்ற்று வெளியான போஸ்டரில் சிம்பு முகம் முழுவதும் ரத்தம் வழிய வழிய தொழுகை செய்வது போல இருப்பது வடிவமைக்கப்பட்டுள்ளாது.

Trending

Exit mobile version