News

மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தயாராகும் பிரம்மாண்ட மேடை

Published

on

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவுக்காக பிரமாண்டமான மேடை தயாராகி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படத்தின் செட்டிங் போல் தயாராகி வரும் இந்த மேடை குறித்த புகைப்படங்கள் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமாருக்மணி அவர்கள் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செட்டிங் புகைப்படத்தை காண கண் கோடி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆடியோ விழாவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பு விருந்தினர்கள் பங்கு பெறுவார்கள் என்றும் இந்த விழா ஆடியோ விழாவாக மட்டுமின்றி தமிழகத்தையே மிகப்பெரிய திருப்பத்திற்கு ஆளாக்கும் விழாவாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version