News

இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே ரஜினிக்கு மத்திய அரசு அறிவிப்பு !

Published

on

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா பால்கோவின் பெயரால் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்து ஆளுமைகளுக்கு இந்த தாதா சாகோப் பால்கோ விருது வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு அந்த விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இன்ற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

51-வது தாதா சாகோப் பால்கோ விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்தற்காக ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த தாதா சால்கோ பால்கோ விருது வழங்கப்படுகிறது என்று கூறினார்.

இந்திய சினிமாவில் உலகில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த் விருது இந்த தாதா சாகோப் பால்கோ விருதாகும்.

ரஜினிக்கு முன்னதாக இந்த விருது தமிழில் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் பாலச்சந்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version