News

ராணுவ வீரருடன் தொலைபேசியில் பேசிய விஜய்

Published

on


தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் டாப் நடிகர்களில் முதல் இடத்தில் உள்ளார் நடிகர் விஜய் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் ஒரு ராணுவ வீரருக்கு போன் செய்து பேசி உள்ளார்.

புல்மாவா நடந்த பயங்கர தாக்குதலை தொடந்து இந்திய ராணுவம் விமானம் மூலம் சென்று பாகிஸ்தான் எல்லைக்கு சென்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் 20 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் எல்லைக்குள் பாதுகாப்பிற்காக செல்ல இருந்த ராணுவ வீரர் செல்வம் இவர் ஒரு தீவிர விஜய் ரசிகர் இவருடன் விஜய் போன் செய்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியானது ஆனால் அதை யாரும் நம்ம்வில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் – மற்றும் ராணுவ வீரர் செல்வம் இருவரும் பேசிய அந்த ஆடியோ பதிவு ஒன்று இப்போது இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த உரையாடலில் விஜய் அந்த ராணுவ வீரர் செல்வதுக்கு ஆறுதல் கூறி உள்ளார் இது அந்த வார்தைகள்.

ஒன்றும் ஆகாது தைரியமாக சென்று வாங்க நீங்கள் திரும்ப வந்ததும் நாம இருவரும் நிச்சயமாக சந்திப்போம் என்று கூறியுள்ளார்.இந்த உரையாடலின் ஆடியோ பதிவு ரசிகர்களால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version