News

பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் பரத்துடன் இணையும் வாணி போஜன் !

Published

on

சன் டீவியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் பிரபலமானவர் நடிகை வாணி போஜன் அதன் பின்னர் தொலைக்காட்சிகளில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஓ மை கடவுளே என்ற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு வந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதையடுத்து வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக பாயும் ஒளி நீ எனக்கு சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், விக்ரமுடன் சீயான் 60, சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்கள், ராதா மோகன் இயக்கும் படம் என அரை டஜனுக்கு மேல் படங்களை கையில் வைத்துள்ளார் வாணி போஜன்.

இந்நிலையில் அடுத்ததாக பரத் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் ஜோடியாக நடித்து வருகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கிவருகிறார். இந்த படத்தில் மேலும் இயக்க்ன்னர் கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் பாடல்கள் எதுவுமே இல்லையாம் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

Trending

Exit mobile version