News

விஜய் – அஜித்துக்கு அதிரடியான கதை ரெடியா இருக்கு களத்தில் சந்திப்போம் இயக்குநர் – என்.ராஜசேகர் !

Published

on

ஜீவா – அருள்நிதி நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம். மாப்ள சிங்கம் படத்தை தொடர்ந்து என்.ராஜசேகர் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மனதில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுவுள்ளது. இது குறித்து இயக்குனர் என்.ராஜசேகர் கூறியதாவது.

சினிமாவில் இன்றைய பொரிய பிரச்சனையே பைரசிதான். களத்தில் சந்திப்போம் படத்தை பல இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டனர். ஒரு பெரிய தொழிநுட்ப குழு அமைத்து அவற்றை நீக்கினோம்.

இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய பேசி வருகிறார்கள் ஜீவா-அருள்நிதி நடித்த கதாப்பாத்திரங்களில் தெலுங்கு முன்னணி நடிகர்களான நானி – சர்வானந்த் இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறோம். இந்நிலையில் களத்தில் சந்திப்போம் பாகம் 2 உருவாக்கும் திட்டமும் இருக்கிறது என்றார்.

அதேபோல் களத்தில் சந்திப்போம் படம் மாதிரி விஜய் – அஜித் இருவரையும் இணைத்து நடிக்க வைப்பீர்களா என அவர்களின் ரசிகர்கள் கேட்கிறார்கள். விஜய் அஜித் சம்மதம் கொடுத்தால் அவர்களுக்கு அதிரடியான கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன் இவ்வாறு அவர் கூறினார்.

Trending

Exit mobile version