Connect with us
 

News

அண்ணாத்த படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் !

Published

on

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கு மத்தியிலும் இப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. இன்னும் ஒரு சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டது.

ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடித்து விட்டு இன்று காலை சென்னை திரும்பினார். மிக விரைவில் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுளது படக்குழு.

டப்பிங் பேசி முடித்த பின்னர் வருடம் வருடம் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். அண்ணாத்த திரைப்படம் வருகிற தீவாளி திருநாளில் ரிலீஸ் செய்யப்படும் என்று முன்னரே படக்குழு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.