Connect with us
 

News

என்னுடைய படங்களுக்கு இரண்டாம் பாகம் என்ற சொல்லுக்கு இடமே இல்லை : ஏ.ஆர்.முருகதாஸ் !

Published

on

நான் இருக்கும் – இயக்கிய எந்த ஒரு திரைப்படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ப்ளான் எனக்கு இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி,துப்பாக்கி மற்றும் கத்தி உள்பட ஒரு சில திரைப்படங்கள் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில் இவர் இயக்கிய தீனா படம் குறித்து இரண்டாம் பாகம் பற்றி தகவல்களும் வெளியானது.

மேலும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படம் கண்டிப்பாக ‘துப்பாக்கி 2’ என்று விஜய் ரசிகர்கள் கூறி அதை ட்ரெண்ட் செய்தும் வந்தனர்.

இதற்க்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் என்னுடைய எந்த படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா எனக்கு இல்லை என்றும் தன்னுடைய படத்தின் கதை அந்தப் படத்தோடு முடிந்துவிடும் என்றும் கூறினார்.

மேலும் தளபதி 65 குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்திற்க்கு ‘துப்பாக்கி 2’ படம் என்று விஜய் ரசிகர்கள் கூறுவது மிகவும் தவறான செய்தி என்றும் கூறினார்.