Connect with us
 

News

ஒரு படத்திலாவது மகாராணி போல கெத்தாக நடந்து வரவேண்டும் !

Published

on

ரஜினி நடித்த பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடுத்துள்ள மாளவிகா மோகனன் கொரோனா வைரஸ் அச்சுறர்ரலால் உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுளது இதன் காரணமாக லண்டனில் படிக்கும் என் சகோதரர் இந்தியா வர முடியாமல் இருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளங்களில் கூறி இருந்தார்.

தற்போது சர்வதேச விமானங்கள் செயல்ப்பட ஆரம்பித்துவிட்ட இதனால் ஒரு விமானத்தில் தனது சகோதரர் இந்தியா திருப்பிவிட்டார். அது மட்டுமில்லாமல் அரசாங்க விதிப்படி அவர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

விரைவில் என் சகோதரர் சொந்த வீட்டுக்கு திரும்பி என்னை பழையபடி எனக்கு தொல்லை கொடுத்து விளையாடுவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்.

மாஸ்டர் படம் பற்றி ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டதுக்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் அந்த படம் குறித்து எதும் சொல்ல முடியாது ஆனால் விஜய்யுடன் இணைந்து நடித்ததை இன்னமும் என்னால் நம்ம முடியவில்லை. அது எனக்கு மிகவும் பிரமிப்பாகவே இருக்கிறது.

விஜய் கூறியது போல தமிழில் பேச நன்றாக கற்றுக்கொண்டேன். இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன். என் ஆசை என்னவென்றால் ஒரு படத்திலாவது மகாராணி வேடத்தில் என்று ஆசைப்படுகிறேன். அது எனக்கு முழுமையான கதாப்பாதிரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு பாடல் இல்லை ஒரு காட்சியிலாவது இளவரசி போன்று தோன்றினால் கெத்தாக நடந்து வர வேண்டும் என்று தனது பேராசையை குறிப்பிட்டுள்ளார்.