Connect with us
 

News

சின்னத்திரை பிரபலங்களின் மரணம் எல்லாம் இப்படித்தான் இருக்குமா என்று யோசிக்க வைக்கிறது !

Published

on

வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கு மருத்துவமனையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையால் வடிவேல் பாலாஜியின் குடும்பம் தவித்தது.

பிறகு சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கிருந்து ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் நிலையில், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் தான், இன்று காலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது திடீர் மரணம், திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Continue Reading