Connect with us
 

News

பிரமாண்ட அரங்கத்துடன் மீண்டும் மாநாடு படப்பிடிப்பு ஆரம்பம் !

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு இத்திரைப்படம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளாது. பக்கா கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை பார்த்திடாத ஒரு சிம்புவை புதிய பரிமாணத்தில் காண்பிக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு.

சுமார் 60 முதல் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் படக்குழுவினர் அடுத்த கட்டதிற்கு தயாராகி விட்டனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கதில் அரசியல் நுழைவில் சிம்பு நடிக்கும் மாநாடு மைதானம் அவருக்கு தயாராகி வருகிறது என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பது ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் மாநாடு படத்துக்காக பிரமாண்ட மாநாடு அரங்கு உருவாகி வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. மாநாடு படத்தின் தலைப்புக்கேற்ப படத்தில் நிறைய அரசியல் காட்சிகள் இருக்கும் என்றும் அரசியல் வெகுஜனக் கூட்டங்கள் பெரும் அளாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இக்காட்சிக்காக சிம்புவின் ரசிகர்கள் பெருமளவில் திரட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.