Connect with us
 

News

சிம்பு பற்றி வெளிவந்த தகவல் எல்லாம் வெறும் வதந்தி

Published

on

தயாரிப்பாளர் ஞானவேல் தயாரிப்பில் கன்னடத்தில் சிவராஜ் குமாரின் நடிப்பில் வெளியான மப்டி படத்தை தமிழில் ரிமேக் செய்கிறார். இதில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் சிம்பு இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள் அதற்க்கு பின்னர் இந்த படம் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரையில் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் மப்டி படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியானது. இது குறித்து ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். அந்த புகாரில், மப்டி படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வரவில்லை. இதனால் படத்தின் செலவு அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது என புகார் அளித்துள்ளார் என செய்திகள் வெளியானது.

ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து வந்த தகவலின் படி இது முற்றிலும் ஒரு வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.