Connect with us
 

News

தடைகளை உடைத்து குறித்த நேரத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாகும் !

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா நடிப்பில் நடித்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை இப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது அந்த படத்திற்க்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வர பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியிட முடியாமல் போனது.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மார்ச் 5-ம் தேதி இப்படம் உறுதியாக ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கியது. ஆனால் நேற்று திடீரென நீதிமன்ற உத்தவின் காரணமாக இந்த படம் வெளியாக வேண்டிய தேதியில் வெளியாகது என்ற செய்திகள் வெளிவந்தன.

தற்போது கிடைத்த தகவல் படி நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தடைகள் அனைத்து தகர்த்தி நாளை மறுநாள் அறிவித்த தேதியில் இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.