Connect with us
 

News

தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைக்கும் சிலம்பரசன் !

Published

on

30 நாளில் ஒரு முழு படத்தையும் முடித்துவிட்டார் இயக்குநர் சுசீந்திரன். அதுவும் சிம்பு நடிக்கும் படம் என்பதுதான் முக்கிய தகவல். படப்பிடிப்புக்கு வரவே பிரச்சனை செய்வார் என பெயர் பெற்ற சிம்பு சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தை 2 ஷெட்யூலில் முடித்து கொடுத்துவிட்டார்.

அத்துடன் இல்லாமல் படத்துக்கு டப்பிங்கும் பேசி முடித்துவிட்டார் இப்போது தனது அடுத்த படமான மாநாடு படத்துக்கு தயாரகிவிட்டார். இந்த படத்தின் ஷூட்டிங்கை புதுச்சேரியில் நடத்துகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடித்து வருகிறார்.

அரசியல் கதை பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்திலிருந்து தொடங்குகிறது. கல்யாணி பிரியர்ஷன் சிம்புவிற்க்கு ஜோடியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார்.