Connect with us
 

News

தலைவி படத்தின் மீது தீபா போட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

Published

on

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி இபப்டத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இம்மாதம் 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கதை எழுதியவர் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் அவர்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைய்யுள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசான என்னிடம் தலைவி படத்தை எடுக்க முறைப்படி அனுமதி பெறவில்லை அதனால் இப்படத்தை தடை விதிக்க வேண்டுமென்று தீபா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் தலைவி படத்தை வெளியிட எந்தவோரு தடையும் இல்லை என்று உத்தரவிட்டது அது மட்டுமில்லாமல் படத்தில் வரும் ஒரு சில காட்சிகள் எனது கற்பனை என்று அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.