Connect with us
 

Uncategorized

படத்தை சுருட்டி பணத்தை சுருட்டி கொண்ட கோமரா இயக்குனர்

Published

on

சமிப காலமாக இயக்குனர்கள் படத்தின் கதைகளை யோசிப்பதை விட எந்த படத்தின் பார்ட் 2 வை எடுத்தால் எளிதாக கள்ளா கட்டலாம் என தான் யோசிக்கிறார்கள்
அப்படிதான் இயக்குனர் மற்றும் ஔிப்பதிவாளர் விஜய் மில்டன் பார்ட்-2 விற்கு தயாரானர் ஆனால் அவர் எடுத்த அத்தனை படமும் தோல்விபடமே ஒரே வெற்றி படம் *கோலி சோடா* (அவர் தான் எடுத்தாரா என சந்தேகம் பலருக்கு உண்டு)
கோலி சோடா பார்ட் 2 வை எடுத்து கள்ளா கட்ட எண்ணினார்
பாகுபலி 2 முதல் கலகலப்பு 2 வரை அனைத்து இயக்குனருமே முதல் பார்டைவிட 2ம் பார்ட்க்கு அதிகம் மெனக்கொட்டு உழைப்பார்கள் செலவு செய்வார்கள்
ஆனால் விஜய்மில்டன் கோலி சோடா 2 என ஒரு போஸ்டர் டிசைன் மட்டும் தயாரித்து படத்தையே முடித்தார்

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் *யார் இவர்கள்* படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து தருவதாக கூறி முழு பணத்தையும் படபிடிப்பின் முன்பே தயாரிப்பாளர் எசக்கி சுந்தரிடம் பெற்று கொண்டு அந்த பணத்தில் கோலி சோடா 2 வை எடுத்துவிட்டார் படத்தில் நடித்த நடிகர்களிடமும் நடிக்கவைக்க பணம் பெற்று கொண்டு படத்தை சுருட்டி தள்ளி கோலி சோடா என்ற பெயரை வைத்தே பெரும் தொகைக்கு வியாபாரம் செய்தார்
சிறிய பட்ஜட் படங்களுக்கு கூட விளம்பரம் செய்யும் இந்த காலத்தில் டிவி விளம்பரம் கூட செய்யாமல் படத்தை சிக்கனமாக சுருட்டியது போல விளம்பரத்தையும் சுருட்டினார் படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தருக்கும் 70% நஷ்டம்
விநியோகஸ்தர் விஜய் மில்டனை அனுகி பேச முயற்றனர் ஆனால் ஓடி ஔிந்து வருகிறார்
எனவே யார் இவர்கள் மற்றும் விஜய் மில்டன் இனி எடுக்கும் படங்களுக்கு ரெட் போட விநியோகஸ்தர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Continue Reading