Connect with us
 

News

புதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், & தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள் !

Published

on

சற்றுமுன் நம் நாட்டில் நிலவிவரும் கொரானா ஊரடங்கு உத்தரவினை முன்னிட்டு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க புதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்த் ex.mla., அவர்கள் காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு மட்டும் 25கிலோ அரிசி(3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன், பொருளாளர் பொன்முடி, துணைச் செயலாளர் மோரிஸ் தொகுதி தலைவர்கள் முத்தியால்பேட்டை ராமு, ராஜ்பவன் பிரதீபன், உழவர்கரை ராஜசேகர், லாஸ்பேட்டை சரவணன், உப்பளம் முனியன், இளைஞர் அணி தலைவர்கள் உருளையன்பேட்டை பிரான்சிஸ், நெல்லித்தோப்பு செந்தில், கதிர்காமம் அருள்பாண்டி, காலாப்பட்டு மனோ தொகுதி நிர்வாகிகள் புதியவன், விஜய், அசோக், ஆனந்த், வினோத், சந்துரு, ஜோசப் ,சதீஷ், வசந்த், தினேஷ் ,சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.