Connect with us
 

News

மகன் பிரிவை நினைத்து சோகத்தில் தளபதி !

Published

on

உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா ஊரடங்கு சட்டத்தை அமல் படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதுமே போக்குவரத்து முறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கள்.

இந்தநிலையில் கனடாவில் படித்து வரும் விஜய் அவர்களின் மகன் சஞ்சய் இந்தியாவுக்கு வர முடியாமல் திண்டாடி வருவதாக விஜய் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளாது.

இதனை அறிந்த விஜய் தன் மகனின் நிலைமையை நினைத்து சோகமாக இருப்பதாகவும் கனடாவில் அவர் தனியாக இருப்பதை அறிந்த அவரின் குடும்பம் மிகவும் மன வருத்ததில் இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருப்பது போன்று கனடாவில் கொரோனா தொற்று அதிகம் இல்லை என்றாலும் சஞ்சய் உடன் படித்தவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் சஞ்சய் மட்டும் தனியாக இருப்பதால் விஜய் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் சஞ்சய் கனடாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற தகவல் மட்டும் விஜய் குடும்பத்தினர்களை நிம்மதி அடைய செய்துள்ளது