Connect with us
 

News

மிக்க நன்றி நெய்வேலி இணையத்தை கலக்கும் தளபதி விஜய் !

Published

on

தளபதி விஜய் ரசிகர்களுடன் மாஸாக எடுத்த செல்ஃபி புகைப்படம் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் , விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியானது.வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அடுத்து , நெய்வேலியில் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று மீண்டும் வேன் மீது ஏறி , ரசிகர்களுக்கு கையசைத்து நன்றியை தெரிவித்தார். போதிய வெள்ளிச்சம் இல்லாததால் செல்ஃபி எடுக்க முடியவில்லை.

தளபதி விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் விஜய்யின் மாஸான செல்ஃபியை உலக அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.#thalapathyvijayselfie என ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவி வைத்து கோமாளி எனும் பிளாக் பஸ்டர் ஹிட் தந்த டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் விஜய்யின் செல்ஃபி படத்தை ஷேர் செய்து ஆஸ்கரா, இதைவிட ஆஸ்கர் விருது பெரிசா என டிவிட் செய்துள்ளார்.

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்று சென்னையில்2 நாள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து எந்த பணமும் கைபற்றபடவில்லை .

ரசிகர்கள் தான் விஜய்யின் அசையும் சொத்துக்கள் என ரத்ன குமார் டிவிட் செய்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் மாஸ்டர் என கமென்ட் செய்து உள்ளார்.

தளபதி விஜய்யின் சக்தி என்ன என்று அவரது செல்ஃபி உணர்த்தி இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கீழே உள்ள சி.அர். பி. எஃப் வீரர் ஒருவரும் விஜய் செல்ஃபி எடுக்கும் போது தனது மொபைல் ஃபோனில் அவரை படம் எடுத்துக் கொண்டு இருந்தது வைரல் ஆகிவருகிறது.

By:Saranya