Connect with us
 

News

முருகதாஸ் – சிவகார்த்திகேயன் சந்திப்பு காரணம் என்னவாக இருக்கும் !

Published

on

மாஸ்டர் படத்துக்கு பின்னர் தளபதி விஜய் நடிக்கவிருந்த 65வது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ் ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார் முருகதாஸ் அந்த கதையை வேறு பல ஹீரோக்களிடம் அந்த கதையை சொல்ல அவர்களும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அது உண்மையில்லை என்கிறது சினிமா வட்டாரம். ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி,ஏழாம் அறிவு படங்களில் நடித்த சூர்யாவும் முருகதாசை அழைத்து இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து வால்ட் டிஸ்னிக்கான ஒரு அனிமேஷன் திரைப்படத்தை எடுத்து தர முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.அந்த படத்துக்கு முருகதாஸ் கதை மட்டுமே எழுது தருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது முருகதாஸ் சிவகார்த்திகேயனை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு படம் சம்பந்தப்பட்டதா அல்லது தனிபட்ட முறையிலான சந்திப்பா என்று தெரியவில்லை.

இதற்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரித்த படமான ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார்.