Connect with us
 

News

சிவகார்த்திகேயனை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் பஹத் பாசில் !

Published

on

மாநகரம்ன் கைதி, மாஸ்டர் என மூன்று ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இவரும் இணைந்து விட்டார்.

அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுவரை தொடங்கவில்லை.

இப்படத்தில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இதனிடையே கமலுக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் பஹத் பாசில் சமீபத்திய பேட்டியில் அதனை உறுதி செய்துள்ளார். மேலும் இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாகவும் அந்த கதாப்பாத்திரம் மிகவும் பிடிந்திருந்ததால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் பஹத் பாசில் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பஹத் பாசில் நடித்திருந்தார்.