Connect with us
 

News

வேங்கை மகனுடன் மோத தயாராகும் வேதா மகன்

Published

on

கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி படத்தை அடுத்து ரஜினிகாந்தை வைத்து பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற அதிகார்பபூர்வ தகவல் அறிக்கை படக்குழுவினர் அறிவித்து விட்டனர். 

இப்போது மற்றுமொரு அதிகார்பபூர்வ தகவல் ரஜினிகாந்த்துடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இதற்க்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களிலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஒரு வில்லன் கதாப்பாத்திரம் என்றும் ஒரு சில நம்மத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அண்மையில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தில் ஒரு மிரட்டலான வில்லன் வேடத்தில் மிரட்டியிருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இந்த படத்தில் ரஜினி-விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.