News

10 ஆண்டுகள் காத்திருந்து நடித்த திரைப்படம் ரத்தம் !

Published

on

இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி நடித்துள்ள படம் ரத்தம். வரும் 6-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தனது மூத்த மகள் மீரா இறந்த சில நாட்கள் இடைவெளியில் முதல்முறையாக விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய சி.எஸ்.அமுதன் எப்போதுமே படத்தை முடித்துவிடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் இன்று அப்படி இல்லை எனது அப்பா இறந்தபோது திரைத்துறையிலிருந்து எங்கள் விட்டுக்கு வந்தவர் விஜய் ஆண்டனி மட்டுமே. அப்போது அவர் என்னிடம் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்றார். அவர் அன்று எனக்கு சொன்னதையே இன்று நான் அவருக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று உருக்கமாகப் பேசினார்.

பின்னர் பேசிய விஜய் ஆண்டனி அமுதன் என் நெருங்கிய நண்பர். அவர் தந்தை எனக்கு இசை சொல்லிக்கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் நான் மியூக் கற்றுக்கொள்ளாமலே சினிமாவுக்கு வந்துவிட்டேன் என்று அவருக்கு என்மீது லேசான கோபம் இருந்தது. அமுதனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது என்று கூறினார். விஜய் ஆண்டனி பேசும்போது மூத்த மகளின் இறப்பு பற்றியும் சரி இளைய மகளை ஏன் இந்த விழாவுக்கு அழைத்து வந்தேன் என்று பற்றும் எதுவும் பேசவில்லை.

 

Trending

Exit mobile version