Connect with us
 

News

நின்மதியை கொடுத்த திரைப்படம் கொன்றால் பாவம் – வரலட்சுமி சரத்குமார் !

Published

on

இயக்குநர் பத்மநாபன் இயக்கியுள்ள திரைப்படம் கொன்றால் பாவம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, நடிகர் சரத்குமார், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சரத்குமார் சார்லி படித்து டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார். வரலட்சுமி இன்று முழுமையான நடிகையாக இருப்பதற்கு காரணம் அவர்தான். எனக்கு வரலட்சுமி திரைத்துறக்கு வருவதில் விருப்பமில்லை. என் மகள் உண்மையில் விஜயசாந்திதான். வாழ்க்கையும் அதிரடி பண்ணக்கூடியவர் வரல்ட்சுமி என்றார்.

படத்தில் நாயகியான வரலட்சுமி சரத்குமார் பேசுகையில் இப்படம் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்தி கொடுத்த படம். ஒரு மனநிம்மதி கொடுத்துள்ளது என்றார்.

சந்தோஷ் பிரதாப் பேசுகையில் இப்படத்தில் எனக்கு முதல் படத்தில் நடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. உடலை பேணுவதில் சரத்குமார் எனக்கு முன்னுதாரணமானவர் என்றார்.