News

தங்கல் பட நடிகையை மூன்றாவது திருமணம் செய்யும் அமிர் கான்?

Published

on

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை 2002-. விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு ஜூனைத் என்ற மகனும் ஈரா என்ற மகளும் உள்ளனர். பின்னர் 2005-ல் லகான் இந்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண வாழ்க்கையும் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கசந்துள்ளது. கிரண்ராவை விவாகரத்து செய்யபோவதாக கடந்த வாரம் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இவர்களின் இந்த பிரிவுக்கு காரணம் இந்தி நடிகை பாத்திமா சனாஷேக் காரணம் என்று தகவல் பரவி வருகிறது.

தங்கள் படத்தில் அமீர்கான் மகளாக பாத்திமா சனாஷேக் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் அமீர்கானுக்கும் பாத்திமா சனாஷேக்கும் நெருக்கம் ஏற்பட்டது. விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தனர். இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து கிசு கிசுக்கள் வந்தன.

இந்த நிலையில் பாத்திமா சனாஷேக்கை திருமணம் செய்வதற்காவே கிரண் ராவை அமீர்கான் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பாத்திமா சனாஷேக் ஐதராபாத்தை சேர்ந்தவர். மும்பை சென்று திரைப்படங்களில் நடித்தார். 56 வயதாகும் அமீர்கான் 29 வயதுள்ள பாத்திமா சனாஷேக்கை 3-வது முறையாக திருமணம் செய்யவிருப்பதாக இந்தி படவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Trending

Exit mobile version