Connect with us
 

News

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி !

Published

on

படப்பிடிப்பின்போது திடீரென்று மயங்கி விழுந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழுந்து இருப்பதாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவத் தொழிலில் இருந்து வந்த சீனிவாசன், சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் லத்திகா என்ற படத்தின் மூலம் நாயகன் ஆனார். சென்னையில் உள்ள ஒரே திரையரங்கில் நீண்ட காலம் அந்த படம் ஓடியது. அதுகுறித்து செய்தித்தாள்களில் தினமும் வந்த விளம்பரத்தை பார்த்து தமிழ் திரையுலகமே வியப்பில் ஆழ்ந்தது. ரசிகர்கள் அவருக்கு பவர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வழங்கினர்.

பெரிய நடிகர்களின், பெரிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு விளம்பரங்கள் தொடர்ந்து வரமுடியாத நிலையில் வருடக்கணக்கில் ஒரு திரைப்படத்திற்கு செய்தித்தாள்களில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டும் யார் இந்த பவர் ஸ்டார்? என்று திரையுலகமே புருவத்தை உயர்த்தியது.

தனது நகைச்சுவை நடிப்பால் அவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். பல கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் உதவிசெய்து மாணவர்களின் மனதில் அதிகம் இடம் பிடித்திருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

தொடர்ந்து இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். செக் மோசடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சிறைக்குச் சென்று வந்தாலும் அவருக்குள்ள மார்க்கெட் இன்னும் ரசிகர்களிடம் குறையாமல் அப்படியே இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார் . தற்போது அவர் படப்பிடிப்பு ஒன்றில் நடித்து வந்தபோது அதிக ரத்த அழுத்தம் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதையடுத்து படக்குழுவினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அங்கு தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.