Connect with us
 

News

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த தளபதி விஜய் !

Published

on

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

நடிகர் விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோட்டில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழக்கை தள்ளிபடி செய்து உத்தவிட்டார். அது மட்டுமில்லாமல் விஜய்க்கு ரூபாய். 1 லட்சம் அபராதம் விதித்தார். அந்த தொகையை முதலமைச்சர் கொரோனா நிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தவிட்டார்.

மேலும் நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் உரிய வரி செலுத்த வேண்டும். அவர்கள் திரையில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று தன் தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமது செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கக் கோரி பல வழக்குகளை சென்னை ஐகோர்ரில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும். இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மதிப்பு கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு சொல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது. அதனால்தான் வரி விலக்கு கேட்டதாகவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விஜய் தரப்பில் போடப்பட்டுள்ள மேல்முறையீட்டு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா ஆகிய இருவர் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.