Connect with us
 

News

தெலுங்கில் சோடா கம்பெனி நடத்தும் கயல் ஆனந்தி !

Published

on

கயல் என்ற படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனை தொடர்ந்து பொறியாளன், சண்டி வீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை,ரூபாய், பண்டிகை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, கமலி புரம் நடிக்காவேரி என பல படங்களில் நடித்தார்.

ஆனந்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படங்கள் அலாவுதனின் அற்புத கேமரா, டைட்டானிக், ஏஞ்சல் இந்த நிலையில் திடீரேன சாக்ரட்டீஸ் எனும் துணை இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார் இப்படத்திற்கு ஶ்ரீதேவி சோடா சென்டர். சுதிர் பாபு என்ற இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சூரி பாபு ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்து காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஆனந்தி சோடா சென்டர் நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். திருமணம் மற்றும் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளுக்கு மின் அலங்காரம் செய்யும் கதா நாயகான சூரி பாபுக்கும் இடையே வரும் காதல் மற்றும் காமெடிதான் இப்படம்.

இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தான் விட்ட அந்த மார்கெட்டை மீண்டும் பிடித்து விடலாம் என்று நம்புகிறார் ஆனந்தி.