News

நடிகை நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது !

Published

on

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அம்மா – அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 5 வருடமாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா. கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையிலுள்ள ஒரு கடற்கரை ஒன்றில் மிக மிக பிரம்மாண்டமாய் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி குழந்தைகளின் பாதங்களில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பதிவில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது: நயன்தாராவும் நானும் அம்மா – அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரார்த்தனைகள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசிவாதமும் தேவை உயிர் மற்றும் உலகம் என தெரிவித்துள்ளார்.

வாகைத்தாய் மூலம்தான் இந்த இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இருந்தாலும் இது பற்றிய தகவல் எதுவும் விக்னேஷ் சிவன் தெரிவிக்கவில்லை. தற்போது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version