News

நடிகை பிரியாமணி திருமணம் செல்லாது !

Published

on

தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியாமணி. அதன் பின்னர் பருத்தி வீரன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்காக தேசிய் விருதையும் பெற்றி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேமிலிமேன் வெப் தொடரில் நடித்து பாராட்டுகள் பெற்றார். பிரியாமணிக்கும் தொழில் அதிபர் முஸ்தபா ராஜூக்கும் காதல் மலர்ந்து 2017 ஆகஸ்டு மாதம் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 வருடம் ஆகிவிட்டது. தற்போது முஸ்தாவின் முதல் மனைவி ஆயிஷா மூலம் பிரியாமணிக்கு சிக்கல் வந்துள்ளது.

ஆயிஷா கூறும்போது என்னை முஸ்தபா இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் பிரிந்து இருந்தாலும் இன்னும் அவர் எனது கணவர்தான். ப்ரியாமணி முஸ்தபாவின் திருமணம் சட்டப்படி செல்லாது என்றார்.

ப்ரியாமணி முஸ்தபா மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிஷாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முஸ்தபா இந்த குற்றச்சாட்டை மறுத்து கூறும்போது என் மீது சுமத்திய புகார்கள் பொய்யானவை. நான் ஆயிஷா மற்றும் குழந்தைகளின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டே நாங்கள் பிரிந்து விட்டோன் 2013-ம் ஆயிஷாவை விவாகரத்து செய்த பிறகே பிரியாமணியை திருமணம் செய்து கொண்டேன். ஆயிஷா இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இப்படி பேசுகிறார் என்றார்.

Trending

Exit mobile version