Connect with us
 

News

வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியாமணி !

Published

on

நடிகை பிரியாமணி பருத்தி வீரன் என்ற ஒரு படத்திலேயே எப்படி பட்ட நடிகை என்பதை சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்து காட்டியவர். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதினை பெற்றார்.

2017-ம் ஆண்டு முஸ்தபா ராஜூ என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முஸ்தபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததாகவும் அவரின் முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் பிரியாமணியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் இவர் மேல் முதல் மனைவி புகார் அளித்தார்.

இந்த புகாரை முஸ்தபா ராஜூ முற்றிலுமாக மறுத்தார். இதனால் பிரியாமணிக்கும் முஸ்தபாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கு எந்தவொரு பதிலும் கூறாமல் இருந்து வந்த நடிகை பிரியாமணி இப்போது கணவரோடு மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.