Connect with us
 

News

மும்மையில் வீடு வாங்கும் சமந்தா !

Published

on

தென்னிந்திய நடிகைகள் மும்மையில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.ஸ்ருதிஹாசனுக்கு மும்பையில் வீடு உள்ளாது. ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மும்மையில் வீடு வாங்கினார். சமந்தாவும் வீடு வாங்கவுள்ளாராம்.

திருமணத்துக்கு பிறகு சமந்தா கணவருடன் ஐதாராபாத்தில் குடியேறியுள்ளார். அதிக தெலுங்கு படங்களில் நடித்தும் வருகிறார். தி மேமிலி மேன் 2 என்ற வெப் தொடரின் மூலம் இந்திக்கு சென்றார் சமந்தா. இந்த தொடரில் சமந்தா நடித்த போராளி கதாப்பாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

இந்த தொடரை தொடர்ந்து பல ஹிந்தி தொடர்களிலும் சரி படங்களிலும் சரி ஹிந்தியிலிருந்து பல வாய்ப்புகள் வருவதால் மும்மையில் தங்கி நடிப்பதற்காக வீடு பார்க்கிறார் சமந்தா.

தற்போது சமந்தா சகுந்தலம் புராண படத்தில் சகுந்தலையாக நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் தயாராகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் கைவசம் சமந்தாவுக்கு உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா அவர்களும் இன்னொரு நாயகியாகவும் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கட்டத்தில் உள்ளது.