Connect with us
 

News

ரூபாய் 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த நடிகை சமந்தா !

Published

on

நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யா இருவரும் அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்வதாக நேற்று இருவரும் அறிவித்தனர்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் நாலு வருட கணவன் மனைவி பந்தம் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது.

இருவரும் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் நாங்கள் எங்களின் தனி தனி பாதையில் செல்கிறோம் என்று அறிவித்தனர். இதனை பார்த்த பல ரசிகர்கள் அதிச்சிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் நாகர்ஜுனாவின் குடும்பம் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அந்த பணத்தை சமந்தா வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள் யாருடைய பணமும் எனக்கு வேண்டாம் என்று சமந்தா கூறிவிட்டாராம்.