News

அதிக படங்களில் நடிக்காதது ஏன் அதிதி பாலன் விளக்கம் !

Published

on

2017-ம் ஆண்டு வெளியான அருவி படம் முலம் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை அதிதி பாலன். ஆனால் இந்த படத்திற்கு பின்னர் அதிதிபாலன் அதிகமான படங்களில் நடிக்கவில்லை.

நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜய்சேதுபதியுடன் ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்தார். இந்நிலையில் மலையாள நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் கோல்ட் கேஸ் படத்தில் நடித்துள்ளார் இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி சமீபத்தில் அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது:-

அருவி படத்துக்கு பின்னர் நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவேளி நிறைய பேருக்கு மிக நீண்ட இடைவெளியாக தோன்றலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இது சினிமாவை பற்றி நான் புரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட இடைவெளியாக நினைக்கிறேன்.

சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும் சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன் என்றார்.

அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக நவரசா என்ற வெப் தொடர் வெளிவர இருக்கிறது. இதனை தொடர்ந்து 9 இயக்குநகர்கள் இயக்க கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Trending

Exit mobile version