News

கார்கி படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்தை தயாரிக்கும் ஜஸ்வர்யா லட்சுமி !

Published

on

விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஜஸ்வர்யா லட்சுமி. அப்படத்தை தொடர்ந்து ஜெகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கைவசம் கட்டா குஸ்தி, பிரியா இயக்கத்தில் அசோக் செல்வனுடன் ஒரு புதிய படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதை தவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

அதை தவிர தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். அப்படம் இவருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. தற்போது இரண்டாவது படத்தை தயாரிக்கவுள்ளார். இதுகுறித்து ஜஸ்வர்யா லட்சுமி கூறும்போது “கார்கி படத்தை தொடர்ந்து குமாரி என்ற மலையாள படத்தை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது புராண இதிகாசம் தொடர்புடைய திகில் படமாக இருக்கும். பொன்னியின் செல்வனில் நான் நடித்த பூங்குழலி கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது” என்றார்.

Trending

Exit mobile version