News

தன் குழந்தையை வித்தியாசமான முறையில் அனைவருக்கும் அறிமுகம் செய்த தொகுப்பாளினி !

Published

on

சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக பணிபுரிந்த தொகுப்பாளினி தனக்கு குழந்தை பிறந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது, அவருடன் இணைந்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர் என்பவரும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அத்துடன், சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா, அதன்பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.கடந்த 2015ம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட ஐஸ்வர்யா சமீபத்தில் கர்ப்பமானார். இந்த நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் “கல்கி அவதாரம் எடுத்து விட்டார்” என வித்தியாசமாக குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version