News

தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட பதிவு !

Published

on

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஒரு நாளைக்கு சுமாராக 3 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை தடுக்க தற்போது முழு ஊரடங்கு விதித்துள்ளது தமிழக அரசு. அது மட்டுமில்லாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறி அரசு கேட்டு வருகிறது.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டு மக்களுக்கும் ரசிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் என்னுடைய முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கவலைக்கிடமான பேரிடர் காலத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் மிகவும் அவசியமானது என்று பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version